ஆன்மாவின் பயணங்கள்
உலகிலேயே மிகவும் கடினமான வினா எதுவென எனைக்கேட்டால் ஆன்மா என்றால் என்ன? என்ற கேள்வியைத்தான் நான் சொல்வேன்
ஆம் இதோ இதனை எழுதிய எனக்குள்ளும் இதனை வசித்து கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும்,சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்திலும் இந்த ஆன்மா தற்காலிகமாக தங்கி உள்ளது
ஆன்மா எங்கிருந்து எப்படி வந்தது?
ஏன் வந்தது?
எதற்கு வந்தது?
ஆன்மா எங்கு எப்படி செல்லப்போகிறது?
ஏன் செல்லப்போகிறது?
எதற்கு செல்லப் போகிறது?
வந்ததும் செல்வதும் இருக்கட்டும்
ஆன்மா இங்கு எப்படி தங்கி உள்ளது?
ஏன் தங்கி உள்ளது?
எதற்கு தங்கி உள்ளது?
இப்படி எண்ணற்ற கேள்விகள் முற்று பெறாமல் எழுந்தவண்ணம் உள்ளது,எவ்வளவோ அறிவியல் வளர்ச்சி நாம் அடைந்துள்ள பட்ச்சத்திலும்,விண்ணிலும்,மண்ணிலும்,கடலிலும் உள்ளதை அறிந்து ஆராய்ந்து தெளிந்து இருந்தாலும்,
ஆன்மாவை அறிதலில் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே தான் உள்ளோம்,
ஆன்மீக,தத்துவ விளக்கங்கள் எவ்வளவோ இதற்க்கு விளக்கமளித்து இருந்த பட்ச்சத்திலும் நமக்குள் இருக்கும் ஆன்மாவை நம்மால் தெளிவாய் உணர முடிகிறதா?
ஆன்மா எங்கிருந்தோ வருகிறது,எங்கோ தங்குகிறது,பிறகு எங்கோ சென்றுவிடுகிறது
அப்படியாயின் ஜனனத்துக்கும் மரணத்துக்கும் பெரிய வித்யாசமில்லை என தோன்றுகிறது எனக்கு
எங்கோ இறக்கிறது இங்கு பிறக்கிறது
இங்கு இறப்பது எங்கோ பிறக்கிறது
சிந்தித்து பாருங்கள் இதில் ஏதேனும் கொண்டாடும் படியோ
இல்லை துக்கப்படும் படியோ எதாவது உண்டா?
இல்லை கொண்டாடுவதலோ,துக்கப்படுவதலோ ஏதேனும் நம்மால் மாற்றம் செய்ய இயலுமா?
மாற்றங்கள் இல்லாது நிரந்தரமாக எதுவும் இல்லை மாற்றங்களை தவிர,
இந்த ஜனனத்துக்கும்,மரணத்துக்கும் இடையில் ஆனா வாழ்க்கை
என்பது ஒவ்வொரு ஆன்மாவையும் பரம்பொருள் உலகம் எனும் பரிசோதனைக்கூடம் அனுப்பி பரிசோதிக்கத்தான்,
சமீபத்தில் எழுத்து தளத்தில் எனக்கு நட்பான அற்புத நண்பர்கள் (ஆன்மாக்கள்) ஏராளமானோர்,
எல்லோரிடமும் ஒருவருக்கு ஒருவர் குறைவில்லாத,வியக்கும் படியான தனித்திறமைகள் தன்னுள் கொண்டுள்ளதை பார்த்து பெருமை கொண்டேன்
பரம்பொருள் நமது ஆன்ம இவ்வுலகில் தற்காலிகமாக தங்கி வாழ என்னவெல்லாம் ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார் என்பதை
கிழே கவனிப்போம்
உடலில் மொத்தம் 100 டிரில்லியன் (100 x 1000000000000) ஸெல்கள் உள்ளன, ஒரு சதுர அங்குலத்தில் உள்ள ஸெல்களின் எண்ணிக்கை, 19 மில்லியன் (19 x 1000000).
• சராசரியாக ஒரு மனித தலையில் 100,000 முடிகள் உள்ளன.
• மனித உடலில் இரத்தம் ஓடும் தமனி, சிரை, நாளங்கள் இவற்றை நீளமாக வைத்தால் அவை 60,000 மைல் நீளம் வரும்.
• பிறந்தது முதல் இறப்பது வரை நம் இதயம் சராசரியாக குறைந்தது 2.5 பில்லியன் தடவைகள் துடிக்கிறது.
• மனித இதயம் உண்டாக்கும் அழுத்தம் சுமார் 30 அடிகளுக்கு இரத்தத்தை பீய்ச்சி அடிக்கப் போதுமானது.
• உடலின் இருப்பதிலேயே உறுதியான தசை, நாக்கு.
• 2010ல் உங்கள் ஒவ்வொரு இமையும் சுமார் 10,000,000 தடவைகள் மூடித் திறந்தன (ஒவ்வொரு வருடமும்).
• ஒரு இரத்த சிவப்பணு உடலை முழுக்க சுற்றி வர ஆகும் நேரம் 20 நொடிகள்.
• உடலின் மொத்த எலும்புகளில் நாலில் ஒரு பகுதி பாதத்தில் உள்ளது .
எண்ணி பார்த்தாலே வியப்பாக இருக்கு
அற்ப பொருள்களுக்கு அடிமை ஆகுதல்
தற்கொலை செய்து கொள்ளுதல்
கொலை செய்தல்
மற்ற ஆன்மாக்களின் உடலையும் மனதையும் வருத்துதல்
இவை அனைத்தும் தவிர்த்து
பரி சுத்த ஆன்மாக்களாய்,இறைவனுக்கு பிடித்த ஆன்மாக்களாய் நீங்களும் நானும் வாழ, இவ்வுலகையும் அவ்வுலகையும் அன்பால் வெல்ல
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்