குறுங் கவிதைகள்

சத்தமில்லாமல்
சிரித்தது நீ
எனக்குள்ளே எப்படி
வானில் பறந்தேன் ....?

நிஜம்
சோகமல்ல
நிதமும் சுகத்தில்...
நினைவாலே நீ ...!

நீ சிரித்து விட்டுப் போன
இடத்தில அவ்வளவு
முத்துக்கள் எப்படி... ?

பொம்மைகள் சிரிக்கின்றன
விளையாடாமல் ..
நீ மட்டும் எப்படி
ஆடாமல் அசையாமல் ...!

யாரிடமும் நான்
யாசகம் கேட்கவில்லை
தானாக வந்தது எப்படி ?
உன் புன்னகை என்னிடம் ...!

கண்ணுக்கு உவமை ...மை
கவிதைக்கு உவமை ..பொய்
காதலிக்கு உவமை ....நிலா
நிலவுக்கு உவமை ....ஓவியமோ...நீ ...!!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (30-Mar-13, 7:22 am)
பார்வை : 94

மேலே