விடியலின் வாசிப்பு....
உன் மௌனத்தின் வாசிப்பு தருணங்கள் அதிகமாகவே படுகிறது எனக்கு...
நெருக்கங்களை இழந்த அந்த நிமிடங்களில்
உயிர் மட்டுமே சஞ்சரிக்கிறது கனவுகளின் மிச்சங்களில்...
நிஜங்களில் பேசப்படாத அந்த அன்பு
நினைவுகளில் பின்தங்கப்படும் சாத்தியக்கூறுகளை அதிகமாய் சுமக்கிறது...
உடன்படாத மனம் விலகச் சொல்கிறது
உடன்பட்டு போன உணர்வோ மறுக்கிறது வாதத்தை...
நிலவின் நேரங்களில் கண் முழித்து
அதில் என் தேரோட்டியை தேடும் போது
துருவமாய் தோன்றி மறைகிறான் அதிகாலையில்...
விடியலின் போது தோன்றும் கனவுகள்
வெளிச்சத்தை காட்டவில்லை....
முடித்துக் கொள்ளலாம் கனவுகளை
இல்லையென்றால் மௌனங்களை
இனிவரும் விடியலாவது வெளிச்சமாகட்டும்....