அரசியல் அடிமைகள் நாம் !!!
சுதந்திரம் பெற்றோம் பல வருடங்கள் முன்பு….!
ஆனால் இன்னும்
“அரசியல் அடிமையாய் வாழ்கிறோம்”
எமனும் நம்மை ஏமாற்றி கொன்று சென்றான்….
பல நல்ல தலைவர்களை!!
தோட்டாக்கள் சத்தம்,,,,
சங்கீதமாய் முழங்குகிறது பல நாடுகளில்….!
வருமானம் பெருகுகிறது என்று,
தன்மானம் மறந்து,
என் நாட்டு அரசாங்கம்!!!
மதுபான கடையினை நடத்த,,,,!
தனியார் பள்ளிகளின் பண தொல்லையால்,,,,
தொலைத்து நின்றனர் பலர் படிப்பினை….!
வீதியில் சிறு சிறு பிள்ளைகள் பிச்சையெடுக்க,,,
என் நாடு தோற்று போனதை உணர்கிறேன்….!
உணர்ச்சியற்று வெறும் உடலாய்,,,,
பணத்தினை தேடும் மனிதர்களாய் வாழும் நமக்கு,,,,
இங்கே கொள்ளையடித்து கொழுத்து நிற்கும்
அரசியல்வாதிகளை குறை சொல்ல
“என்ன தகுதி இருக்கிறது”
காசுக்கு தொலைத்துவிட்டோம்……!
நம் உரிமைகளோடு சேர்த்து நம் நாட்டினை…..!
மீட்க வழி இல்லயோ மனிதா