ஊனமான ஏழை பெண்

வறுமைக்கு பிறந்த
வெறுமை மகள் நான்
கூடவே ஊனமான கால்கள் ........

காலப்பயிர் நான் காத்துகிடக்கிறேன்
காசு இல்லாததால் வெறுத்து வாழ்கிறேன்
ஏழைப்பெண் என்னை மேலும்
ஏழ்மையாக்குகிறது ஊனம் ........

அப்பன் குடிகாரன்
அம்மா கூலி வேலைக்காரி
தம்பி பொறுப்பில்லாத ஊர் சுற்றி ......

அவர்களுக்காக உழைத்து உழைத்து
ஊனமான கால்களோடு
ஊனமானது என் மனமும் ........

உற்ற உறவுகள் ஏதும் இல்லை
உதவும் மனதோடு ஒருத்தரும் இல்லை
கூரைகுடிசையில்
வாடகைக்கு வாழும் ஏழை பெண் நான் ......

கடந்துபோகுது காலம் வேகமாய்
என்னால் முடிந்ததை எட்டி பிடிக்கிறேன்
வேகமாய் போகும் சிலதை மட்டும்
ஊனமாய் இருந்து வேடிக்கை பார்க்கிறேன் ......

வயது ஏறிக்கிட்டே இருக்கு
வசதி ஏறல
விலைவாசியும் ஏறுது
இன்னொருபக்கம் வரதட்சனையும் ஏறுது .....

நூறு புகைப்படம் கொடுத்தேன்
பொண்ணு புரோக்கரிடம்
ஒன்னுக்கு கூட பதில் இல்ல
என் உள்ளத்தை பார்க்காமல்
என் ஊனத்தை பார்த்தவர்களே அதிகம் .......

கெட்டிகார பெண் நான்
கொட்டி கொடுக்கும் பணம் இல்லே
சீர்மிகு பெண் நான்
சீர்கொடுக்கும் வசதி இல்ல
வாழ காத்திருக்கிறேன்
வரதட்சணைக்கு வழி இல்லே .......

ஏய் இறைவா
என்ன கொடுமை செய்தேன் நான்
என்னை ஒதுக்கி பார்க்கும் உலகில்
உழைத்து தெம்பாய் நிற்க
ஒழுங்காக படைக்காதது ஏன் இறைவா ........

பணமே பெரிதாய் போன உலகில்
நல்ல மனம் படைத்தவர் எவரும் இல்லே
பொன்னையும் பொருளையும் தேடும் உலகில்
ஏழை பெண் நான் எங்கு செல்வேன் ....

எழுதியவர் : வினாயகமுருகன் (19-Apr-13, 12:20 pm)
பார்வை : 300

மேலே