பிரிவு கொடிது

பிரிதல் சாத்தியமற்றது
சில அழுகைகளும் சிரிப்புகளும்
வேடிக்கையாக தெரிகிறது
இப்போதும் ஞாபகத்தில்
வலிகளின் ரணங்கள் மட்டுமே.....
ஒற்றைவரியில் எதையும் சொல்ல முடியாது
நிஜங்கள் என்னை சுடும்போது
தீயில் காய்கிறேன் நான்
இழப்புகள் எவ்வளவு மோசமானவை
என்று தெரிந்திருந்தும்....உன் இழப்பை
மட்டும் என்னவோ மனம் தாங்கமுடியாமல்
தவிக்கின்றது.....
நினைக்கும் நிமிடங்களில்
எல்லாம் ஏதோ ஒன்று
என் நெஞ்சை பிசைகிறது
நேசக்கரம் நீட்டு.....உன்
திமிரான பேச்சுபோதும்......
அதர்க்காக மெளனங்களை
மட்டும் பதிலளிக்காதே
உன் நினைவுகளை
வெட்டவும் முடியாமல்
ஒட்டவும் முடியாமல்
நான்........