வன்புணர்வு....!
நக்கினிகை நகநுதியாம்
பாற்கடலும்
பருகித் துப்பும்
பேரெழுந்த கோபத்தின்
நமூது.....
இத்திணைக் காணாத
காமமெனில்
சாடல்....!
நமர்க் கூடிக்
களிப்புற்று
உமிழ்ந்தவொரு
சேற்றில் பிறப்புற்ற
நடுகையெனில் மூடம்...!
காணுகை
அற்றவொரு
அரூபமென்றொரு
கவிப்பிதற்றல்.....!
நக்கினம் அற்றதாய்
வேறிலை
ஆயினும்
உன் மனச்சேற்றின்
மயிர்த் தூவல்
நிரப்பிட்ட வக்கிரக்
கிறுக்கல்...!
பிறப்புறுப்பில்
இரும்புணர
உனையன்றி யாருணர்வார்
இழிபிறப்பே...?