உன் வெட்கம்
என்விழியால் உன்னை பார்க்க
நாணம் கொள்கிறது .... என் விழியல்ல
உன்னுணர்வு என் நெஞ்சில்
விரல் தீண்டும் போதெல்லாம்
விழி மூடிக் கொள்கிறது ...உன்
வெட்கம் வெளியேறா வண்ணம்
என்னை காணும் போதெல்லாம்
உன் கால் விரல் போடும் ...கோலம்
வெட்கத்தின் ஓவியம்
இடைவெளி குறையும் தருணமெல்லாம்
உன் குரல் ஒலியும்...நாணத்தால்
குறுகிப் போகும் மாயம்
உன்னருகே நடக்கும் போதெல்லாம்
உன் நினைவிழந்து ....வெட்கத்தால்
மலரும் புன்னகை மந்திரம்
இச்சையுடன் பார்க்கையிலே
அச்சமுடன் நீ கொண்ட ...நாணத்தால்
அகிலமே உதிர்ந்து போகும்