உன்னால் உருவான இயற்கை
மேகங்கள் எல்லாம் கூடி பார்த்து
உனக்கு நிழல் தர முடியவில்லை
என்ற வருத்தத்தில் அழுதது தான்
"மழை"
மழை துளி பட்டாலும்
பூ மேனி நோகும்
மழை துளியை கரைக்க
தோன்றியவன் தான்
"கதிரவன்"
உன் பாதங்களை மட்டுமே
தொடமுடிகிறது என்ற
வருத்தத்தில் அழுது அழுது
கறிக்கிறது
"கடல்"
நீ பேசிய வார்த்தைகளை
தேடி சென்றதால்
உலகம் முழுவதும்
நிரம்பி இருக்கிறது
"காற்று"
என்னை போலவே இந்த இயற்கையும்
உனக்காதான் உருவானது……