நட்புக்காக
---இன்றைய சிந்தனைக்கு......
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு ------வள்ளுவர்
ஒருவனை அவனுடைய நண்பனைக் கொண்டு முடிவு செய்
என்பது ஓர் ஆங்கிலக் கூற்று.
அன்னையின் கடைக் கண்கள் நெஞ்சில் வஞ்சமில்லா இனம்
தரும் என்பார் அபிராமிப் பட்டர்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் என்பார் வள்ளலார்
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரீகர் ---என்பது பண்டைத் தமிழ் பண்பாடு.
நஞ்சு வேண்டாம் நன்னெஞ்சு நமக்கு போதும் .
நல்ல நண்பர்கள் இணைந்தால்
பூமியிலும் வாழலாம்
வானிலும் பறக்கலாம்.
----நட்புடன்,கவின் சாரலன்