நான்?????

நான் என்ன உன் வீட்டு வாசலில் தேங்கி இருக்கும் சாக்கடையா?
என்னை பார்த்ததும் ஒதுங்கி செல்கிறாய்.
உடம்பில் அடிப்பட்டு உதிரம் கொட்டும்போதும்
வராத ஓர் வலி
உன் ஓர விழிப்பார்வை என் மேல் படாத போது
உயிரே போகும் அளவுக்கு வலிக்குதடி
வீட்டு நாய்குட்டிக்கு
உன் மடி மீது இடம் இருக்கு
உன் பின்னால் நாய்க்குட்டியாய் நான்,
உன் மனதின் ஓரத்தில் ஓர் இடம் இல்லையா?

எழுதியவர் : (2-Dec-10, 10:46 am)
சேர்த்தது : Dexter1477
பார்வை : 343

மேலே