கருங்குயில்…

கருங்குயில் ஓன்று வாயிற் கதவின் மேல்...
கூவும் என்று அசையாமல் பார்த்திருந்தேன்
அதுவரை பறக்காமல் இருக்கவேண்டுமே
என்று யோசித்திருந்தேன்...
என் மன ஓட்டத்தை படித்திருக்கும்...
இருந்தும் கூவாமல் அழுத்தமாய்...

இருந்துவிட்டு போ...

உன் மின்னும் கருப்பு மேனியும்
சிவப்பாய் கண்களும்
வெளீர் வெண்மையில் அலகும்
நீளமாய் வாலும்
கானம் இல்லாமலே
நீ எனக்கு அழகுதான்...

இனி நீ பறந்து போகலாம்...

எழுதியவர் : அகிலா (1-May-13, 5:20 pm)
பார்வை : 145

மேலே