மே தினம்....

"நாங்கள் - வேர்கள்
வெளியே தெரிவதில்லை"

உழைத்து தேய்ந்து போயின
எங்களின் - உள்ளங்கை ரேகைகள்

"உயிரினும் மேலானது
எங்களது உண்மை

உண்மைக்கும் மேலானது
எங்களது உழைப்பு....!!

இரவில்லை
பகலில்லை - எங்களுக்கு
உழைக்கும் நாள் மட்டுமே
எங்களின் கணக்கு..............!

"உழைத்த எங்களின் - கை
ஓங்கும் போதெல்லாம்
கொடுப்பவன் - கை
குட்டுகிறது.......!!

குட்டும் - கை
கொடுப்பதெல்லாம்
உழைத்த எங்களிடமிருந்து
கிடைத்தது............!!

"இன்றைக்கு"
நாங்கள் உழைப்பாளிகள்..!
"நாளை"
நாங்களும் முதலாளிகள்..!

எழுதியவர் : வ.மெய்யப்பன் (1-May-13, 10:57 am)
சேர்த்தது : meyyappan
பார்வை : 153

மேலே