நான் கவிதை வடிக்கும் நேரம்....

நெஞ்சைப் பிளக்கும் சோகங்கள்
நஞ்சாய்த் தொடரும் சண்டைகள்,
சொல்லிலடங்கா வலிகள்
சோர்வு வியர்வைத் துளிகள்..

பணி நாள் ஒன்றில் பயணித்தால்
பயணங்கள் என்றும் முடிவதில்லை,
தனிப் போராட்டம் கண்டு
பிணிப் பசியில் வீழ்கிறோம்..

பயணங்களில் உண்டாகும் விரக்தி,
நாளும் பரவித் திரிய,
சயனங்களில் உண்டாகும் சொப்பனங்கள் கூட,
என்றும் அதை நினைவு படுத்த..

நட்பும் பிரியும் நாளன்று
நாடிகள் விட்டுத் துடித்திடுதே,
நாளைய பொழுது விடியும் வேளையிலே
நயவஞ்சகக் கூட்டம் விழித்திடுதே..

ஒருமையான வாழ்க்கையில்
வெறுமை இருளாய் நிறைந்திடவே,
வழக்கம் பிறழ்ந்து எதுவும் நடப்பதில்லை
புழக்கத்திலுள்ள பிரச்சனைகள் ஓராயிரத்தை எட்டும்..

தினம், ஓடு பாதையில்
முட்கள் நிறைந்து,
அதைத் தாண்டி வந்து
மூச்சிரைக்க அமர்கிறேன்..
.......
நாளும் கவிதைகளை
தமிழ் நயத்துடன் வடிக்க..!!

எழுதியவர் : பிரதீப் (2-May-13, 11:52 am)
பார்வை : 140

சிறந்த கவிதைகள்

மேலே