.............அந்தப்புரம்...............

உன் கூரிய நகங்கள் கூறிய வார்த்தைகள்,
கூனிக்குறுகிக்கிடக்கிறது தேகம் !
கூச்சம் மறந்து முற்றிய முனகல்களுடன் !
தீண்டாதே எனை இன்னொருமுறை !
இறப்பை தரிசித்து இங்கு திரும்புகிறேன் நான் !
காதலா !!
கட்டித்தழுவு அதற்காக !
ஒட்டி எடுக்கப்பார்க்காதே உயிரை !
உனக்காக வாழ்பவளை உடைத்து சில்லாக்குவது,
உனது கரங்கலன்றி வேறு எது?
என்னே நியதி இது?
தனியாய் சந்திக்கிறேன் பேர்வழி !
சதிகாரனாகிறாயே உன் உடமைக்கு நீயே?
தொடு மூழ்கடிக்காமல்..................
விடு சாகடிக்காமல்.........................

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (2-May-13, 9:11 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 79

மேலே