விந்து புரியும் விந்தை

அப்பன் பங்கிற்கு விந்தொரு துளியும்
அம்மா பங்கிற்கும் கருவறை இடமும்
கடவுள் பங்கிற்கு உயிரின் பகிர்வும்
உலகின் பங்கில் மனிதனும் ஒருவன் ........

உருவம் கொடுத்து அசைவுகள் கொடுத்து
மூச்சுகாற்றை கொடி வழி பெற்று
இருட்டில் கிடந்தவன்
வெளிச்சம் பார்க்கிறான் ......

கருத்தும் வெளுத்தும்
ஆணும் பெண்ணும்
சில நேரங்களில்
இரண்டும் கலந்துமாய் ..........

முட்டாளும் அறிவாளியும்
திருடனும் காவல்காரனும்
விஞ்ஞானியும் மெய்ஞானியும்
அரசனும் ஆண்டியும்
ஏழையும் பணக்காரனும்
படித்தவனும் படிக்காதவனுமாய்
இன்னும் பலதுமாய் ................

ஒரு துளி உருவமானது
உருவமும் ஒரு துளியானது ............

அரசியல் செய்தான்
ஆட்சி புரிந்தான்
விஞ்ஞானம் படைத்தான்
அண்டம் நோக்கினான்
நிலத்தை தோண்டினான்
மருத்துவம் கண்டான்
மகத்துவம் செய்தான்
இன்னும் மற்றவையும் செய்தான் ............

ஒரு துளி செய்யும் அதிசயம் பாருங்கள்
மனிதனை படைத்த ரகசியம் கேளுங்கள்
அது வெறும் துளியல்ல
விந்தை புரியும் விந்து துளி
அதுவே வீரிய துளி ................

எழுதியவர் : வினாயகமுருகன் (9-May-13, 5:55 pm)
பார்வை : 506

மேலே