நாலு பேருக்கு நன்றி
நாலு சொந்தம் , நாலு உறவு
நமக்கு வேணும் நினச்சு பாரு
இன்றும் வேணும் , இனியும் வேணும்
தூக்கி போ(ட)க நாலு பேரு வேணும்
நினைக்க நமக்கு நேரமில்லை
போகும் நாள் வெகு தூரமில்லை
சந்திக்க வந்தால் தயாரில்லை
சலாம் சொன்னால் பதிலுமில்லை
உலக வாழ்வில் நன்மை செய்து
உருப்படியா புரிந்து பழகு
உறவில் ஒரு பிணைப்பு இருக்கு
உனக்கு ஏன் ? கர்வ செருக்கு !
சொந்தமிருக்கு , சுகமும் இருக்கு
இறந்த பின்னால் என்ன இருக்கு
குடும்பம் இருக்கு , இழப்பும் இருக்கு
நினைந்து பார்த்து கோபத்தை தளர்த்து
பிறந்த போது பாசம் கொண்டு
வளர்ந்த போது பண்பு வந்து
வாழும் போது இறை வழியில் செல்லு
உறவின் அருமை தெரியாது இன்று
அறிந்த பின் வருந்தி பயனேது
புரிந்து கொள் உலக வாழ்வு சொற்பம்
உறவு என்று நாலு பேர் உறவு வேணும்
ஸ்ரீவை.காதர்.