பல் கலைக் கழக வாழ்க்கை

மகிழும் இந்த வாழ்க்கையினை
நெகிழ்வுடனே நமக்களித்த
நாயனை நினைத்திருப்போம்
நிதமும் நாமும் செல்கையிலே!

வாழத்தெரியாத வாலிபர் நாம்
வாழ்வை புரியவைத்த இடமிதுவை
போற்றிடவே அவன் துணையாய்
கோர்த்திடுவோம் பல கையும் ஒரு கையாய்!

ஒற்றுமையை உணரவைத்து
வேற்றுமையை புரியவைத்து
மாற்றுகையை புரிந்திட
வழிகாட்டிடும் இடமிதுவே!

கணவுகளை நனவாக்கி
கணவு தோனுவதை உருவாக்கி
எம் உணர்வுகளை சிறப்பாக்கி - எம்மை
சமூகத்திற்கு உவப்பாக்கி வைத்ததுவே!

இந்த இயற்கையை ரசித்தபடி - எம்
வலக்கையை இணைத்து நின்று
இந்த உலகிற்கு கிழக்கையே காட்டிநிற்போம்
கை கொடுங்கள் தோழர்களே!

எழுதியவர் : acmsfa (15-May-13, 11:01 am)
பார்வை : 114

மேலே