'அந்த' இடத்தில சுட்டு, ஹிலாரியை கொல்லவேண்டும் - பிட்டே சாண்டில்லி ..? வாழ்க... அமெரிக்க வெறி..?
கடந்த ஆண்டு பென்காசியில் உள்ள அதாவது லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹில்லாரி கிளிண்டன் அவர்களின் தவறான அணுகுமுறையே காரணம் என கூறியுள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிட்டே சாண்டில்லி அவர்கள்.
அந்த பென்காசி தூதரகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.. நிறைய பேர் படுகாயம் அடைந்தார்கள்..மேலும் கடற்படையின் சீல் வீரர்களும் கொல்லப்பட்டார்கள்...இவர்களின் குடும்பத்தினர் சார்பாகவும் இந்த சீல் வீரர்களின் சார்பாகவும் உனக்கு ஏன் இந்த தண்டனையை வழங்கக் கூடாது என்றார். கூடவே ஒபமாவுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்..
ஹிலாரி அவர்களை கைது செய்து விசாரித்து, 'அந்த' இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும். அதுவும், என் கையால் நானே இந்த தண்டனையை தர வேண்டும். துப்பாக்கியால் சுட்டதும் ஹிலாரி அவர்கள் உடனடியாக இறந்து விடக் கூடாது. வலியின் வேதனையை அவரது கண்களில் நான் பார்க்க வேண்டும். மரண வலியால் துடிக்கும் அவரிடம் சென்று உன் தவறான அணுகுமுறையால் ( அதாவது வெளிநாட்டு கொள்கையாக இருக்குமோ..? ) உன்னால் கொல்லப்பட்ட எல்லா அமெரிக்கர்களின் சார்பாகவும் உனக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று நான் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.
லிபியா தொடங்கி இலங்கை வரை கொல்லப்பட்ட பல லட்சம் அப்பாவி மக்கள் சார்பாக அமெரிக்க அரசுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சொன்னால் என்ன செய்வார்கள்...?
பெண்ணின் 'அந்த' இடத்தில் சுட வேண்டும் என்று கூறுகிறார் ஒரு பிரபல வானொலி தொகுப்பாளர்..? பெண்கள் பற்றி மிக மிக இழிவாகவும் அவர்கள் மனிதர்களே அல்ல என்று அமெரிக்கர்கள் மட்டுமல்ல அணைத்து நாட்டு மக்களும் இந்த கருத்துக்களைத் தான் கொண்டுள்ளனர் என்று கருதலாமா...? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு