போலி சாமியார்

ஆண்டவா
நீ பிரபஞ்சம்
முழுவதும்
பரவிக்கிடப்பவன்
அல்லவா ?

உனக்குமா
தெரியவில்லை
போலி எது அசல்
எது என்று ?

தெரிந்தும் சும்மா
இருக்கிறாயா ?

உன் பெயர் சொல்லி
கெட்ட வழியில்
செல்லும் இவர்களை
நீ தண்டிக்க
மாட்டாயா ?

அப்படிபட்டவர்களை
இவ்வுலகில்
இல்லாமல் செய்.

உனக்கு புண்ணியமாக
போகட்டும்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (23-May-13, 5:54 pm)
பார்வை : 90

மேலே