மௌனம்
சந்தர்ப்பம் மிக புத்திசாலி
கோபமும் அமைதியும்
அதன் ஆயுதங்கள்
நிகழ்வுகள் தொடங்கியதும்
சகமனித முகங்கள்
மேடையேறி சிரிக்கும் அல்லது
திரையிட்டு மறையும்
கைகள் மாலை தேடும்
அல்லது சவுக்கெடுக்கும்
வார்த்தைகள்
நிறம் மாறும்
உறவாடும் அல்லது
கழுத்தறுக்கும்
தப்பிக்கும் வழி ஒன்று தான்
மௌன சாவி கொண்டு
புத்தியை விடுதலை செய்
கேள்விக்குறிகளை தட்டி நிறுத்து
அவை ஆச்சர்யமாய் மாறி
நம் கை கோர்க்கும்
பாராட்டுக்கும் பழிக்கும்
மௌனம் மட்டுமே
பதிலாகும் எனவே
அதிகம் நீ மௌனி !!

