எங்கேயும்,எப்போதும்!!!

எவரொருவர் தான் கட்டிய
மனைவிக்கு சுய மரியாதை
அளித்து, அளவில்லா
அன்பு செலுத்துகிறாரோ
அவர் குடிசையும்
கோவிலென திகழும்,
****************************************************************************
அவள் அக்கம்
பூசிய அஞ்சனம்,
ஆதனம் எனக்கொண்டு,
அட்சய பாத்திரமாய்
நிரம்பி வழிந்து,

என் மன
வெற்று பக்கங்கள்
எல்லாம் பதிவான
முத்து முத்தான
கவிதை தொகுப்புகள்!!!

கள்ளிச் செடிகளிலும்,
கழிவறை சுவற்றிலும்,
என் நகம்
கொண்டு இரகசியமாய்
கீறப்பட்ட கல்வெட்டுக்கள்!!!

என் ஒட்டுமொத்த
ஒத்திகைகளும் ஒரேயொரு
ஓரவிழி பார்வையால்
தேறாது எனச்சொல்லும்
அவள் திமிர்!!!

துள்ளி ஓடும்
என் துள்ளுந்தும்,
அவள் இல்லம்
நெருங்குகையில் அவள்
கோலமிட புள்ளிவைக்க
கோளாறுசெய்து துடிப்பிழந்து
அல்லவா போனது!!!

அகம் முழுக்ககாதல்
முகம் முழுக்கநடிப்பு
தோழன் என்ற
தோரணை போர்வையில்
காதலியோடு கழிந்த
வெற்று மாலைப்பொழுதுகள்!!!

அவள் மாலைமாற்றி
கட்டியவன் முன்னிலையில்
அண்டைவீட்டு அண்ணனென
அறிமுகம் செய்து
கைகுலுக்கி செல்லும்
வரை,தீராத
குழப்பத்தில் நான்!!!

காலச்சக்கரத்தின்
வேகமான சுழற்சி
நான் காதலித்தவள்
சிறந்தவள் எனில்,நான்
கைப்பிடித்தவள் மிகச்சிறந்தவள்
என சொல்லவைத்தது!!!

ஆம்
அவளோ காதலுக்கு
பரிசென தாளாதசோகத்தில்,
குழந்தையென அழவைத்தாள்,

இவளோ காதலுக்கு
பரிசாய் குழந்தையை
எனக்காய் பெற்றெடுத்து
சிரிக்க வைக்கிறாள்!!!

அவள் எனது
கற்பனைகளை மட்டுமே
அலங்கரித்தாள்,

இவளோ என்
கற்பனைகளையும் தாண்டிய
நிஜங்களையும் நித்தம்
நித்தம் அலங்கரித்தபடி
எங்கேயும் எப்போதும்.,!!!

ஈர்ப்புக்கும் காதலுக்கும்
உள்ள வித்யாசங்கள்
மிகமிக நுட்பமானது!!!

உண்மையை உணருங்கள்
மனைவியை காதலியுங்கள்
மனைவியை கொண்டாடுங்கள்!!!

-அன்புடன் நவீன் மென்மையானவன்

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (5-Jun-13, 12:27 pm)
பார்வை : 649

மேலே