நிச்சயமாக வேண்டும்...

என் வீட்டு ஜன்னலோடு
கவி பேசும் அந்த
தூறல் தேவதையை
தொட்டிலில் தாலாட்டும் தென்னம்
பிள்ளையாக வேண்டும் நான்...

மலை அடிவார
மண் வாசனையோடு
தினமும் மழை
நீராட வேண்டும் ...

பல்லாங்குழி சாலையில்
பரதம் ஆடும்
பேருந்தில் அவ்வப்போது
பின்னிருக்கை பயணம் வேண்டும்...

திருவிழா தேரடியில்
துரு துரு தேடல்
வேண்டும் அரும்பு
மீசை ஆர்ப்பரிப்போடு...

வசந்த புன்னகையோடு
கன்னியின் மணம்
வீசும் காதல்
சமிக்கை வேண்டும் இடையிடையே...

அலமாரி பின்னறையும்
கருமாரி நிழற்படமும்
காதல் கடிதத்தின்
கருவறையாக வேண்டும்...

இதழ் ரேகையில்
அடிக்கடி ஓர்
அதிர்வு வேண்டும்
அவள் அணைப்பின்போது...

நெடுஞ்சாலை நிழற்
குடையில் நித்திரை
வேண்டும் இளைப்பாறும்
பொழுதுகள் எல்லாம்...

மலை முகட்டில்
முத்தம் தர
வேண்டும் நித்தமும்!
முடிந்தவரை சத்தமாக...

பால் வாடை வீசும்
மழலை இதழ்
தீண்டலில் நான்
இமை மூட வீண்டும்...

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன்(எ) skmaheshwaran (5-Jun-13, 2:13 pm)
சேர்த்தது : எஸ்.கே .மகேஸ்வரன்
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே