அம்மா

அன்று ஒருநாள்

என் தோழி நளினி

வீட்டுக்கு தோழமியுடன்

போயிருந்த போது

அவள் வீட்டில் இல்லை

அலுவலுகம் போய் இருபதாக

நடுத்தர வயது வேலைகாரி சொன்னாள்

"கொஞ்ச நேரம் இருங்க அம்மா வந்துடுவாங்க"

அங்கு காத்திருந்த கொஞ்ச நேரத்தில்

நளினி குழந்தை யிடம் பேச முடிந்தது

உன் பெயர் என்ன ?

நான் கேட்க

"கௌரி" என்று பதில் சொன்னது குழைந்தை

"என்ன படிக்கிற ?"

"எல் .கே. ஜி"

எந்த பள்ளிகூடம் ?

......குழந்தைக்கு புரியவில்லை தமிழ்

உடனே நான்

"எந்த ஸ்கூல்ல படிக்கிற ?".

"ஆர். எஸ் .மெற்றிகுலெசன் ஸ்கூல்"

"உங்க அம்மா பேரு என்ன ?"

"அருக்காணி "பட்னு பதில் வர

"என்ன உங்க அம்மா பேரு அருகாணியா?"

அதற்குள் அங்கு தோழி நளினி வர

"உங்க பெயர குழந்தை அருகாணின்னு சொல்லுது...?"என்று நான் கேட்க

"குமார் அவ என்னை சொல்லல வீட்டு வேலைகாரி பெயர் சொல்றா ?" என்று தோழி சொல்ல

"என்ன இது ?" நான் முழிக்க

"ஆமா குமார் நான் மோர்னிங் 7 ஒ கிலோக்
வழிகி போய் நைட் 8 ஒ கிலோக் வேலை முச்சிட்டு
விரதால அவ என்னை அம்மான்னு கூபிடாம நளினி இன்னுதான் கூபிடுவா " என்றால் சலிப்புடன்

அப்போது

குழைந்தை "அம்மா டிபன் ரெடியா ? " என கேட்டவாறு சமையல் அறை பக்கம் ஓடியது...

நிஜ அம்மாவை சட்டை செய்யாமல்


எனக்கு கொஞ்சம் தலை கிறுகிறுத்தது

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (8-Jun-13, 5:02 pm)
பார்வை : 320

மேலே