விடுதலைப் புலிகளால் தமிழர்கள் அதிகம் கொல்லப்பட்டனர் - ஞானதேசிகன் ..! தொடர்ந்து பொய்யா பரப்பி வரும் தமிழக காங்கிரஸ் கட்சியினர்...?!

ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். இப்பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் பலமுறை முறையிட்டுள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு இந்தியா சார்பில் புது படகுகள், வலை தயாரிப்பு ஆலை, 150 பஸ்கள், 79 பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை சீரமைப்பு என பல திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளனர். தமிழர் பகுதியில், ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால், தமிழர்கள் தான் பாதிக்கப்படுவர்.

போரில், விடுதலைப் புலிகளால், இலங்கை தமிழர்கள் அதிகம் பேர் கொல்லப்பட்டனர் என ஐ.நா. சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வைக்கோ, சீமான் ஆகியோர் இலங்கை தமிழர்களை வைத்து கட்சியை வளர்கின்றனர்.

கடந்த காலங்களில், தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டால், உடனடியாக விடுவிக்கப்படுவர். ஆனால் இலங்கையில் இருந்து வருபவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், தமிழக மீனவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி இவ்வாறு தான் பொய் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறது. ஆக, தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இலங்கை ராணுவத்தால் அல்ல என்று கூறியிருக்கிறார்.

அமேரிக்கா சென்றுள்ள மாணிக் தாகூர் அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சே 13 சட்ட திருத்தத்தையே ரத்து செய்து விடுவதற்கான அணைத்து வேலைகளிலும் இறங்கி விட்டார்..

ஆக, வாய்க்கு வந்தபடி பேசிக்கொள்ளலாம்..தமிழர்கள் தானே பேசாமல் கொள்ளாமல் இருந்து விடுவார்கள் என்று ஒரு ஆழமான நம்பிக்கையை வளர்த்துள்ளார்கள் 50 வருடங்களாக ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (10-Jun-13, 2:57 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 79

சிறந்த கட்டுரைகள்

மேலே