எங்க தெரு maram

கூலி வேலைக்காரி புஷ்பா
மச்சு வீடு கட்டுகிறாள்-மகிழ்ந்தேன்
சிக்கனமாய் சேர்த்த காசு
வீடாகப்போகிறது.
இனி மழைக்கு வெளியே ஒதுங்க வேண்டாம்.
புயல் காற்றுக்கும் பயப்பட வேண்டாம்.
ஆனாலும் சிறு நெருடல்
வாசல் வேப்பமரம் என்னாவது?
நான் வரும் போதே வரவேற்ற மரம்.
என் அத்தையும் பார்த்த மரம்.
எப்படியும் 50 வயதிருக்கும்.
இப்போதெல்லாம் வலிக்கிறது அதை
பார்க்கும் போதெல்லாம்.
கணவனிடம் சொன்னேன்
ஐயோ ரொம்ப வர்ஷம் வளர்ந்த மரமாச்சே என்றார்.
என் வீட்டுக்கு வருபர் எல்லாம்
பரவயில்லையே நல்ல காற்று வருமே என்பர்.
என் வீட்டுக்கு அடையாளமும் அது தான் .
ஒரு மாலையில் என் மூன்று வயது
மகளிடம் சொன்னேன் மரம் வெட்டப்போகிறார்கள் என்று.
இரண்டு நாள் மரத்தையே அடிக்கடி பார்த்தாள்.
மறுநாள் கேட்டாள் "அப்போ குருவில்லாம் எங்க போகும்? ,நீ தான சொன்ன மரம் இருந்தா மழை வரும்னு,அப்போ மழையே வராதா?"
நான் என்ன சொல்ல?
குருவிகள் வேறிடம் போகுமென்றா?
சொன்னால் அடுத்த கேள்வி இதாகத்தான் இருக்கும்
"ஏன் ம்மா,புஷ்பா வேற எடத்துக்கு போக முடியாதா?" .......