வழிவிடுவோம் வாழ்வளிப்போம்....

வேகமாய்ப்
போக வேண்டிய கட்டாயம்....
உயிர் அல்ல ஊர்தி
படைத்தவனின் பாசக் கயிறுக்கு பயந்து....
பஞ்சாய்ப்பறக்க வேண்டிய நிர்பந்தம்!!!
சிக்னல்கள் எல்லாம் சிக்கலாய் போன பரிதாபம் !!!
வாகனத்தில்,
உடன் இருக்கும் உறவினரின்
உச்ச கட்ட ஆதரவும்.....
உடன் வர முடியா உறவினரின்
உண்மையான தொழுகையுமே !!!
அந்த நோயாளிக்கு ஆறுதல்.....
ஒலிபெருகியின் வாசனையை முகர்ந்த பிறகும் !!!
நகர்ந்து செல்ல மனமில்லா மானுடமே !!!
மனித உயிருக்கு முன்னால் !!!
இப்படி ஒரு அவசியப்பயணம் தேவைதானா ???
இறைவனே !!!
இறப்பு விடுக்கை கொடுப்பதற்க்கு முன்னால்....
அந்த இரும்புப் படுகையில் பயணிதுப்பார்.....
சாவு சாதாரணம் அல்ல என்பது ஊர்ஜிதப்படும்!!!
இது முறைகேடல்ல....
என் தாழ்மையான முறையீடு....
ஜனங்களின் மனங்கள் வழிவிட்டு திறந்தால் போதும் !!!
இந்த அணை உடைப்பு தடுக்கப்பட்டு....
அரவணைப்பால் (மருத்துவமனையால்) காப்பாற்றப்படும் !!!
மானுடமே !!!
திருந்தி வாழ சந்தர்ப்பம் திரும்ப வராது !!!
திருந்தினால் இந்த நிலை உங்களுக்கும் வாராது !!!
ஆதலால்,
வழிவிடுவோம் வாழ்வளிப்போம்....
வழிவிட்ட நண்பன்...
ஜெகன்.ஜீ