நானுமோர் குழந்தை

தந்தைக்கென்றொரு தினம்
கொண்டாடுகிறதொரு உலகம்
என்னுலகில் நான்... காணாத தந்தைக்கு
கொண்டாடுவதால் என்ன பயன்

அப்பாவி ஒரு பெண் தப்பாகி
வம்பாக ஒரு பேறுகண்டு
ஈன்றுவிட்டாள் இரக்கமின்றி
மறந்துவிட்டாள் என் தந்தையினை

கைவிரல் பிடித்து கதைகள் பல பேசி
விளையாட்டு பொம்மைகளும்
வீரவசனக் கதைகள் என
தந்தைவழிப் பாசமெனக்கு
சித்திரத்தில் கண்டதுண்டு

என் சரித்திரத்தில் தேடுகிறேன்
தந்தையாக வாசமெனக்கு
தந்தவர்கள் யாருமில்லை
தரித்திரனாம் தரணியில்
நானுமோர் குழந்தை

எழுதியவர் : ஹாசிம் (16-Jun-13, 3:21 pm)
பார்வை : 84

மேலே