மனம் உன்னை கேட்டிடுதே
பனித்துளியே பனித்துளியே
நெஞ்சில் விழுந்திடு ஒருமுறையே
மனம் சில்லென ஒரு நொடி மாறிடவே
ஒரு வரமென உன்னை கேட்டிடுதே
மனம் உன்னை கேட்டிடுதே .............
மண் ஏங்கும் மழைபோல
உன் பார்வை விதை தூவுதே
நெஞ்சில் காதல் முளைக்குதே
உன்னாலே உன்னால்தானே ...............
ஏதோ ஒன்று சொல்லும் சாக்கில்
நான் போகின்ற இடம் தேடி
உன் மனம் தானாய் அலையும்
என் கண்ணை காணும் நேரம்
உன் செய்தி மறந்தே போகும்
மௌனமாய் விழிகள் பேசும்
ஒரு உன்னத கலையோ காதல்
வரைமுறை தாண்டும் ஆசை
சொல்லாத மனதின் இன்னொரு
உருவமா காதல் ................