கள்ளிப்பால்

கருவில்
சுமந்த எனக்கு
நீ கள்ளிப்பால்
கொடுக்கையிலே
காக்கும்
கடவுளெல்லாம்
கல்லாகி போனதோ ?

ஆண்
பிள்ளையாய்
பிறந்திருந்தால்
அரவணைத்திருப்பாயோ?
பாவி நான்
பெண்ணாகி போனதால்
மண்ணாகி போக விட்டாயோ?

பறவையாக பிறந்திருந்த
பத்துவருஷம் வாழ்ந்திருப்பேன்
பட்டாம்பூச்சியாக பிறந்திருந்த
ஏழு நாள் வாழ்ந்திருப்பேன்
பாலாய் போன
பெண்ணாய் பிறந்து
கண் திறப்பதற்குள்
கள்ளிப்பால குடிச்சேனே !

என் முச்சு
நின்னு போகையிலே
கள்ளிசெடிக்கும்
கண்ணிர் வரும் ....
காக்காமல் விட்ட
கடவுளுக்கும்
நெஞ்சு உறுத்தும் ....

அடுத்த
ஜென்மத்திலே
இங்கே
ஆணாய் பிறந்திடனும்
இல்லாவிட்ட
கள்ளிசெடி முளைக்காத
தேசத்திலே
பெண்ணாய் பிறந்திடனும் !!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (28-Jun-13, 12:22 pm)
பார்வை : 242

மேலே