மௌனத்தின் காரணம்...!!!

அன்பே...!!!
மழைக்கு காத்திருக்கும் மக்கள் போல...
உனது வருகைக்காக ஏங்கி
காத்து நிற்கும் என் மனம்
மழையின் வருகையை கண்டு
தோகையை விரித்தாடும் மயிலை போல...
உன் தொலைதூர வருகையை கண்டு
மகிழ்ந்தாடும் என் மனம்
மழை நின்ற பின் நிளவும் அமைதி போல...
நீ அருகில் வந்ததும்
மௌனம் கொள்ளும் காரணம் என்ன...????