தவமிருந்து பெற்ற வலிகள்!!!(தாரகை)

கூரிய நகங்களால்
உண்மையான உணர்வுகளை
கீறிக் கிழிக்கின்றான்,
மனிதம் பேசிக்கொண்டு,,,,
மனைவியை தோழியாய்
நடத்துகின்றான்,
தோழியை மனைவிபோல்
கொஞ்சிக்கொண்டு,,,,
பத்தினியைப் பலரோடு
படுக்கச் சொல்வான்,
பலரோடு படுப்பவளுக்கு
பரிந்து வாதம் செய்துகொண்டு,,,,
கண்டகதை தோண்டித் துருவி
கேட்டு மகிழ்வான்,
காலம் காத்து நிற்பான்
காலைவார,,,,
தனிமை போக்க புது உறவில்
பாசம் விதைப்பான்,
தனியே விட்டு பழைய உறவில்
உலகை மறப்பான்,,,,
உடலாலும் உயிராலும் பிரிவேனென்று
தேவை முடிந்ததும் புறப்படுவான்
வசனம் பேசிக்கொண்டு,,,,
அணுஅணுவாய் பல உறவை
சித்திரவதை செய்வான்,
அன்பின் மொத்த உருவமாய்
படம் காட்டிக்கொண்டு,,,
தவமிருந்து பெறுகின்றோம்
இவ்வுறவுகளை
கண்கள் செந்நீர் சிந்த
இதயம் கண்ணீர் சிந்த
வலிகளை வரமாக பெற்றுக் கொண்டோம்!!!