காகிதப் பூ !

காகிதப் பூ !

அழகிய கவிதை
தொகுப்பின் இறுதியில்
எழுதாத பக்கங்களாய்
நானிருக்கிறேன்..

கவனிப்பாரற்று
ஒவ்வொரு முறை
உன் விரல் ஸ்பரிசத்திற்கு
ஏங்கிய படி...
காற்றின் அசைவில்
எழும்பி எழும்பி
உன் கவனத்தை
ஈர்க்கும் பொருட்டு...

உன் முகம் பார்க்க
விடாமலும் சில
நேரங்களில்...
பட்டென அறைந்து
மூடிவிட்டு போகிறாய்.

குறிப்புக்கென ஒதுக்கிய
என் பக்கத்தை..
குறிப்பாய் பார்க்க மறுக்கிறாய்.
என்றேனும் ஒரு நாள்
உன் அவசர கால
கிறுக்கலுக்காவது
உதவட்டும் என்றே
உயிர்ப்புடன் இருக்கிறேன்.
அச்சடித்த காகிதங்களுக்கு
நடுவே கசங்காது காத்திருக்கும்
காகிதப் பூவாய்.

எழுதியவர் : sankarsasi (20-Jul-13, 9:38 pm)
பார்வை : 106

மேலே