காசியானந்தன் கதைகள் 02

மரத்தை வெட்டி வீழ்த்திவிட்டு கோடரியும்,கயிறும் விறகு வெட்டிக்குக்குப்பக்கத்தில் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களை தன் அலகால் கொத்திவிட்டுப்பறந்து போனது.

"இந்த மரங்கொத்தியைப்பார்த்தாயா? நான்கு மரங்களையும் மாறி மாறித்தன் அலகால் வெட்டியது--ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்தமுடிந்ததா? என்று கயிற்றைப்பார்த்து கேட்டது கோடரி.

"மரங்கொத்தியால் அது முடியாது என்றது கயிறு."
ஏன் அப்படிச்சொல்கிறாய்??

கயிறு சொன்னது:-
"நாலு மரத்தையும் வெட்டுகிறவன்
ஒரு மரத்தையும் விழுத்துவதில்லை"

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (20-Jul-13, 9:59 pm)
பார்வை : 161

மேலே