காதல் யுத்தம்

ஒற்றையடி பாதை
ஓரத்தில்
வற்றாத ஓட
சுற்றி வர காடு - நடுவில்
கல்லின் மேல்
உன் நினைப்பில் நான்..

சுத்தி சுத்தி உன் நினைப்பு
கைபேசியை பார்த்த படியே...
மௌன காட்டில்
சிரித்தது என் கைபேசியில்
மலர்ந்தது முகம்...

ஆயிரம் மைல் தூரத்தில்
என் நினைவில்
உன் உயிர்
என் பெயரை
சொல்லி கூவியது...

பல மணி நேரம்
சிரித்து சிரித்து பேசினோம்...
கடைசியில் மௌனம்
அதுதான்
பிரிய போகும் தருணம்...

வார்த்தை இன்றி
ரத்தம் இன்றி
வலிகளால்
வாடிய முகமாய்
நீயும் நானும்...

கடைசியாய்
கேட்டேன் முத்தம்
தராமலே
போய்விட்டாய் நீ....
அதனால்
என் நெஞ்சில்
இன்றும் யுத்தம்...!!!

எழுதியவர் : பூவதி (22-Jul-13, 3:30 am)
Tanglish : kaadhal yutham
பார்வை : 113

மேலே