என் கவிதையே ....!
சங்க காலக் கவிதையாய்
சாய்ந்து சாய்ந்து
மேலும் கீழும் அசைத்து
கை கால்களின்றி அசைகின்றாயே
காற்றுக்காரன் துணையோடு ....!
மரபுக் கவிதையாய்
மனம் முழுதும்
உன்னையே நேசிக்கின்றோமே
யுகம் யுகமாய்
வாழும் நாள் வரை
உன் வாழ்க்கையோடு ...!
புதுக் கவிதையாய்
புன்னகையோடு என்
புது வாழ்க்கையும்
உன்னோடு சேரவேண்டும்
எப்பொழுதும் ....!
ஹைக்கூ கவிதைகளாய்
நெஞ்சை கொள்ளைகொள்ளும்
நறுமணமும் பொய்கை தென்றலும்
உன்னோடு சேர்ந்திட ரசித்தேன்
உணர்ந்தேன் சுவாசித்தேன் ...!
இத்தனை அழகும் சேர்ந்த
காவல் தெய்வங்களாய்
எம் விரல்களுக்கும் பிடித்த
எம் கவிதைகளுக்கு
உருவம் பதித்தாயே
என் கவிதையே ....!