ThayaJ217 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ThayaJ217 |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : 10-Jun-1974 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 2156 |
புள்ளி | : 881 |
கவிதைகள் உலகில் வாழ ஆசைப்படும் ஒரு ஜீவன்.
அனைவரது கவிதைகளும் எனக்குப் பிடித்தமானவை
அனைத்தும் நடப்பது இறைவனால் தான் என நம்புபவள். அனுமதித்த எழுத்துவிற்கு நன்றி.இதுவும் இறைவனால் தான் நன்றி
காதலும் காமமும்.
இரு பத்தைந்தில் தொலைத்த என்னை
அறு பத்தைந்தில் தேடுகிறேன்—அவள்
கரு விழிஓரம் சுருங்கிய வரிகள்.
எழுதும் கவிதை புரிகிறேன்.
ஒரு பத்தைந்தில் ஊறிய புதுமை
இரு பத்தைந்தில் தேறிடுமே--.முதுமை
அறு பத்தைந்திலும் ஆறாது இளமை
பல பத்தைந்திலும் வாழ்ந்திடுமே!!
பிறவிக் குருடர் புறமென்ன அறியார்
அறிவால் அறிவார் உள்ளம்—உண்மைக்
காதலும் குருடே கண்களில் அழகே
காதல் உருவம் ஒன்றே!
இரு மனந்தேர்ந்து ஒருநிலை இணைவில்
உருகச் சேர்ந்தது காதல்—அது
பெருகும் பண்பில் இருகும் அன்பில்
பருகும் இன்பம் காதல்.
காதலின் உச்சம் காமம் என்பார்.
காமம் மெச்சும் காமுகர்—அந்தக்
காதல் எல்லாம் காதல
கவிச்சுடரே
கவியில் பிழைதிருத்தும்
கண்ணம்மா - இந்த
கவியின் நலம்விரும்பும்
செல்லம்மா..
நான்கரை ஆண்டுகள்
நட்போடு நகர்ந்துவிட்டது
நடந்தேறிய நாடகங்கள்
எதிலுமா எனை வெறுக்கவில்லை..?
தமிழன்னை பரிசளித்த
பொற்கிழியே!
தவறுகள் கண்டுமா - எனை
ஒதுக்கவில்லை...?
தொட்டவையாவும்
துலங்காதபோதும்
தோல்வியே இவளுக்கு
நிலையானபோதும்
உறவுகளின் வஞ்சத்தில்
வதைபட்டபோதும்
பணமிழந்து பொருளிழந்து
பிச்சையெடுத்தபோதும்
பெற்றவளே சிலநேரம்
குற்றம் சொன்னபோதும்
சீ !
என்று விலகிடாமல்
சேர்த்துக்கொள்வதேனடி...?
பால்வடியும் பூவே
தேன் சூழ்ந்த தீவே
வான்மாட ஒளியே
நான்பாடும் கவியே
கவிச்சுடரே
கவியில் பிழைதிருத்தும்
கண்ணம்மா - இந்த
கவியின் நலம்விரும்பும்
செல்லம்மா..
நான்கரை ஆண்டுகள்
நட்போடு நகர்ந்துவிட்டது
நடந்தேறிய நாடகங்கள்
எதிலுமா எனை வெறுக்கவில்லை..?
தமிழன்னை பரிசளித்த
பொற்கிழியே!
தவறுகள் கண்டுமா - எனை
ஒதுக்கவில்லை...?
தொட்டவையாவும்
துலங்காதபோதும்
தோல்வியே இவளுக்கு
நிலையானபோதும்
உறவுகளின் வஞ்சத்தில்
வதைபட்டபோதும்
பணமிழந்து பொருளிழந்து
பிச்சையெடுத்தபோதும்
பெற்றவளே சிலநேரம்
குற்றம் சொன்னபோதும்
சீ !
என்று விலகிடாமல்
சேர்த்துக்கொள்வதேனடி...?
பால்வடியும் பூவே
தேன் சூழ்ந்த தீவே
வான்மாட ஒளியே
நான்பாடும் கவியே
அதிகம் யோசிக்கவேண்டாம்
இது கவிதையென்று
நான் சொல்லவில்லை.
ஆனாலும்
இது க’விதை..!
”கத்தி ”பேசினால்
சத்தம் வெடிக்கும்
யுத்தம் கிழிக்கும்
பதட்டம் வரும் -பின்பு
கெளரவம் உடையும்.
எந்த கத்தி ?
யோசிக்க வேண்டியது
உங்கள் புத்தி..!!!
-இரா.சந்தோஷ் குமார்
எனது கனவு
இரவு வாய்க்காலில் ஓடுகிறது
பலப் பல வண்ணங்களாக......
பட்டாம்பூச்சிகள் இரவெல்லாம்
சிறகை விரித்து அயர்கிறது
உன்னை அள்ளிக் குடிக்க....
என் காதல் நிலா
வானில் என்கிறாய்
அமாவசை என்பதை மறந்து விட்டு...!
என் காதல் சொல்கிறாய்
காற்றாகி கடலோடு
மயங்கிக் கிடக்கிறேன் மூழ்கி...
சுவாசிக்கத்தான் உயிர்
விதையாகிக் கிடக்கிறேன்
குடை பிடிக்கிறாய்
மழை வேண்டாமென்று...
என் பார்வை அம்பை
வீசுகிறேன் மரக்கிளையில்
வளைந்து கொடுக்கிறது
நீ பறவையாக அமர....
உன் தோட்டத்தில்
வண்ண மலர்கள் எல்லாம்
அடம் பிடிக்கிறது
சிரிக்க மாட்டேனென்று ...
நீ செல்லு
எந்தன் நெஞ்சே...
நீ சொல்லு
எந்தன் உறவை
என்னவளிடம்.....
உன்னை பாராமலிருந்தால்
தினம் கண்ணீரால்
என் விழிகள் போர்த்தப்படும்...
உன்னை சேராமல் போனால்
அங்கு காதலின்
சுவர்க்க கதவுகள் சாத்தப்படும்....
இதை சொல்லாமல் போனால்
என் நெஞ்சம்
மேலும் வருத்தப்படும்....
நீ வந்தால் மட்டுமே
என் காதல் அகராதி
மறுபடியும் திருத்தப்படும்....
உனை தினம்
நான் பாடிட்ட
கவிதைகள் சொல்லவா....?
என் காதலை மறுத்து
நீ கோடிட்ட
வார்த்தைகள் சொல்லவா....?
உன்னில் நீ என்றாவது
என்னை நீ கண்டாயா....?
என்னில் நான் எந்நாளும்
உன்னை நான் கண்டேனே....
நீ வந்துவிடு
என் இதயத்தில்...
தந
நீ மட்டும் ஏன்?
வானமும் பூமியும்
எப்போதும் உரசிக் கொண்டு
என்ன மொழி பேசுகின்றன?
காற்றாய் விழி வாள் வீசிப் பார்க்குமோ?
மழையாய் ஆனந்தக் கண்ணீர் விடுமோ?
மேகமாய் மோதி முத்தமிழில் இசைக்குமோ?
விழிகளால் வெப்பப் பூக்கள் தூவி வாழ்த்துமோ ?
மேலிருந்து விழும்
தென்னங் குலைகளைப் போல
துடிதுடித்து வீழுமோ?
ஈர ஆடை உடுத்தி மகிழுமோ?
மறைந்திருந்து வில் அம்பைப் பூட்டி
ஏழு வண்ண வானவில்லை தூது விடுமோ?
இத்தனையும் கண்டு மிதக்குமோ ?
மறைந்திருந்துதான் ரசிக்குமோ?
அந்தரத்தில்வெள்ளி நிலா.....!
உன்னைக் கண்ட பொழுதில்
வியந்துதான் போகிறேன்
மீண்டும் வியப்பில்
நீலத் தோட்டத்து நிலாவாய் மி
அம்மா !
ஒரு புன்னகை
ஒரு கவளம்
ஒரு அணைப்பு
ஒரு கொஞ்சல் அழுகை
உன் மடியில் மட்டும்
அம்மா !
உறங்க இடம் தருவாயா?
போடி என்று வெறுப்பாயா?
தூய மனதோடு தூய பால் போல
கெஞ்சுகிறேன் வேறெதுவும் வேண்டாம்
இந்த ஒரு பட்டா போதும் தாயாக
விடியும் வரை உன் மடியில்....!
மாறிவிட்டன விரைவுப்
பேருந்து வண்டிகளாக
நாமுமதான் நவீன உலகில்.....
நேரமில்லையென
வேலைச் சுமைககும்
குடும்ப சுமைக்கும்
பயந்து கொண்டு......
நாடியே கிடக்கின்றன
தெருத் தெருவாய்
திறந்து கிடக்கும்
பார்களைத் தேடி
போதை வண்டுகளெல்லாம்.....
மஞ்சள் முகம் மாறி
ஒப்பனையில் விதம் விதமாய்
அலங்காரமாய் ஜொலி ஜொலிக்கிறது
சில் வண்டுப் பூக்களாய் .....
கோவிலில் மட்டும்தான்
நெற்றியிலிடும் திலகம்
விதம் விதமாய் ....
கேட்பாரற்றுக் கிடக்கிறது
தெரு வாசல் அலங்கோலமாய்
மாக் கோலமின்றி
செயற்கையில் ஓவியமாய்...
கண்கள் பளபளக்க
சிமிட்டி அழைக்கிறது
மின்சார அடுப்புகளும்
மின்