யாழ்மொழி - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  யாழ்மொழி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  06-Jan-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jul-2013
பார்த்தவர்கள்:  3442
புள்ளி:  1284

என்னைப் பற்றி...

என் முடிவுகளை எதற்காகவும் மறுபரிசீலனை செய்ய நான் ஒருபோதும் விரும்புவதில்லை......

உயரப் பறக்கையில் எரிந்துவிழும் இறகுகளுக்காக நான் வருத்தப்படுவதும் இல்லை அதற்காக அனுதாபங்களை எதிர்பார்ப்பதுமில்லை....

நான் எப்படியோ அதுவே நான்.... எனக்கான சுதந்திரம் என்னிடம் உள்ளது அதற்கான மதிப்பும் நான் அறிவேன்........

அதிகாரம் அறவே பிடிக்காது.. அன்பு அதிகமாய் வைப்பதில்லை..

என் எண்ணங்களில் குறுக்கிடாத அழகான குடும்பம் .... தன்னம்பிக்கை தரும் தொழில், மனநிம்மதி அளிக்கும் பொது சேவை.... தாய் போல் ஒரு தோழி... துணையிருக்கும் நண்பர்கள்....

என் வழியில் நான் செல்லத் தடைகள் இல்லாத வாழ்க்கை எல்லாமே அன்னையினால்.....

என் படைப்புகள்
யாழ்மொழி செய்திகள்
யாழ்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2016 2:08 pm

விடியல் காணாத
என் உலகில்
அஸ்தமனங்க நிரந்தரம்...

ஆடைகளின்
அத்தியாவசியம் அறிந்ததுதான்
என்
அன்றாட நிர்வாணம்...

என்
அட்சயக்குடங்கள்
அமுதம்தர மறுத்ததில்லை
இங்கு;
புறமெய்திட நேர்ந்தாலும்
பிழையில்லை...

ஆண்மை தூரிகையால்
என் பெண்மைக்குள்
புனையப்பட்ட ஓவியங்களில்
இதுகாறும் எவரும்
"வர்ணங்கள்" பிரயோகிக்கவில்லை...

என்
சாதி கூறும் அந்தரங்கத்தில்
சுகங்களன்றி சூளுரைகள்
தொடுக்கப்பட்டதில்லை...

என்னை தாசி என்பது
இவர்களின் வழக்கம்
உண்மையில் சமத்துவம்
என்னில் மட்டுமே அடக்கம்....

மேலும்

நிஜம் .....அருமை .....டா எப்படி இருக்குற .....நலமா என்றும் அன்புடன் அண்ணா 20-Oct-2016 1:54 pm
உண்மைதான்..தூ சான பார்வையில் தூய்மையும் அழுக்காகத்தான் தெரிகிறது 26-Jul-2016 8:41 am
அருமை! துளிகள் ஒவ்வொன்றும் அருமை! வாழ்த்துக்கள் ... 25-Jul-2016 4:05 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) பிரியாராம் மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Jul-2015 1:12 pm

பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப

மேலும்

காற்றின் பக்கங்களில் ****கவிதைகள்..கவிதைகள்..! நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும் ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி... 31-Aug-2015 6:20 pm
அன்புள்ள கவித்தா சபாபதி, தங்கள் கவிதை 'காற்றின் கவிதைகள்' 3 பத்திகளில் அமைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பத்தியிலும் அளவடிகள் (4 சீர்கள் கொண்டது) ஐந்து உள்ளன. ஐந்தாவது அடி 3 பாட்டிலும் தனித்து பொதுவாக வருகிறது. எனவே ஒவ்வொரு பாடலையும் முதல் 4 அளவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கலிவிருத்தம் என்று வருகிறது. பூக்கள் மணமெழுத புல்லாங்குழல் இசையெழுத ஈக்கள் எதுகையிட இலைகள் மோனையிட கீற்று தவிப்பெழுத கிளிகள் பேச்செழுத ஊற்று சிலிர்ப்பெழுத உயிர்கள் மூச்செழுதும் காற்றின் பக்கங்களில் கவிதைகள் கவிதைகள்! ஐந்தாவது அடியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒரு உதாரணம் தருகிறேன். நான் இத்தளத்தில் நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று முதல் பாடல்: அனைத்து பாடல்களும் கழிநெடிலடியாக ஆறு சீர்களில் அமைந்த 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும். 4 சீர்கள் - அளவடி; 5 சீர்கள் - நெடிலடி 6 சிர்களும் அதற்கு மேலும் - கழிநெடிலடி ஐந்தாவது அடியும் ஆறுசீர்கள் - தனியாக 'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை' என .பொதுவாக ஒவ்வொரு பாடலிலும் அமைந்திருக்கும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் 1 அன்புடன், வ.க.கன்னியப்பன் 29-Aug-2015 9:43 pm
இயற்கை யாவும் இசைந்து இசைக்கிறது உங்கள் கவி தனில் சந்தங்களினால்... கவிதை கண் முன்னே யாவையும் உணரச் செய்கிறது... அருமையான படைப்பு... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கவிதை படைப்புகள்.. 29-Aug-2015 5:48 pm
தாங்கள் இக்கவிதைப் பற்றிய ஆய்வை பகிர்ந்தால் மகிழ்ச்சியுடன், ஆவலுடன் கண்டு பயனுறுவேன் ஐயா 29-Aug-2015 11:45 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) priyaram மற்றும் 16 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2015 1:12 pm

பூக்கள் மணமெழுத
****புல்லாங்குழல் இசையெழுத
ஈக்கள் எதுகையிட
****இலைகள் மோனையிட
கீற்று தவிப்பெழுத
****கிளிகள் பேச்செழுத
ஊற்று சிலிர்ப்பெழுத
****உயிர்கள் மூச்செழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

சேற்றுக் கூழருந்தி
****செங்கதிர்கள் அசைந்தெழுத
ஆற்றின் கால்களில்
****சலங்கைகள் குதித்தெழுத
சோற்றுக் கனவுகளில்
****சிறகுகள் சோர்ந்தெழுத
நேற்றில் எஞ்சிய
****நம்பிக்கை உயிர்த்தெழுதும்
காற்றின் பக்கங்களில்
****கவிதைகள்..கவிதைகள்..!

நைந்த நினைவுகளும்
****நிலத்தின் பெருமூச்சும்
நாளைய கேள்விகளும்
****நீங்காத ஆசைகளும்
காலப் பெருவெளியின்
****கவலைகளும் கண்ணீரும்
கரைப

மேலும்

காற்றின் பக்கங்களில் ****கவிதைகள்..கவிதைகள்..! நிறைவான கவிதை...... நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்ததும் ஓர் நிறைவான கவிதை படிக்க வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி... 31-Aug-2015 6:20 pm
அன்புள்ள கவித்தா சபாபதி, தங்கள் கவிதை 'காற்றின் கவிதைகள்' 3 பத்திகளில் அமைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு பத்தியிலும் அளவடிகள் (4 சீர்கள் கொண்டது) ஐந்து உள்ளன. ஐந்தாவது அடி 3 பாட்டிலும் தனித்து பொதுவாக வருகிறது. எனவே ஒவ்வொரு பாடலையும் முதல் 4 அளவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் கலிவிருத்தம் என்று வருகிறது. பூக்கள் மணமெழுத புல்லாங்குழல் இசையெழுத ஈக்கள் எதுகையிட இலைகள் மோனையிட கீற்று தவிப்பெழுத கிளிகள் பேச்செழுத ஊற்று சிலிர்ப்பெழுத உயிர்கள் மூச்செழுதும் காற்றின் பக்கங்களில் கவிதைகள் கவிதைகள்! ஐந்தாவது அடியை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அமைப்பிற்கு ஒரு உதாரணம் தருகிறேன். நான் இத்தளத்தில் நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம் என்ற தலைப்பில் 10 பாடல்கள் பதிவு செய்திருக்கிறேன். உதாரணத்திற்கு ஒன்று முதல் பாடல்: அனைத்து பாடல்களும் கழிநெடிலடியாக ஆறு சீர்களில் அமைந்த 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' ஆகும். 4 சீர்கள் - அளவடி; 5 சீர்கள் - நெடிலடி 6 சிர்களும் அதற்கு மேலும் - கழிநெடிலடி ஐந்தாவது அடியும் ஆறுசீர்கள் - தனியாக 'அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை' என .பொதுவாக ஒவ்வொரு பாடலிலும் அமைந்திருக்கும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. பாடல் 1 அன்புடன், வ.க.கன்னியப்பன் 29-Aug-2015 9:43 pm
இயற்கை யாவும் இசைந்து இசைக்கிறது உங்கள் கவி தனில் சந்தங்களினால்... கவிதை கண் முன்னே யாவையும் உணரச் செய்கிறது... அருமையான படைப்பு... வெற்றி நிச்சயம்... வாழ்த்துக்கள்... மேலும் மேலும் வளரட்டும் உங்கள் கவிதை படைப்புகள்.. 29-Aug-2015 5:48 pm
தாங்கள் இக்கவிதைப் பற்றிய ஆய்வை பகிர்ந்தால் மகிழ்ச்சியுடன், ஆவலுடன் கண்டு பயனுறுவேன் ஐயா 29-Aug-2015 11:45 am
கட்டாரி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Apr-2015 8:36 am

இந்திராணி கோவிந்தன்... என்னைப்பற்றி என அவர் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.... சொல்வதற்கு நிறைய இருப்பதைப் போலவே அவர் கவிதைகள் சொல்கிறது. வழக்கம் போலவே சிறந்த கவிதைகள் பலராலும் கவனிக்கப்படாமல் இருப்பது... வழக்கமான ஒன்றுதானே... நேரமிருப்பின் பாருங்கள்.. மிக எளிமையாக எந்தவித பகட்டும் இல்லாமல் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும் கவிதைகள் ... அவர் சமீபத்தில் பதிந்த "உன் கைக்கும் வேலை உண்டு..." கவிதை எண் 239566.. படித்துப் பாருங்கள்... அருமையான எழுத்தாளர்.. வரவேற்கிறோம்...!!

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Mar-2015 8:54 pm

இதயம் பறக்கின்றது
இறக்கை இல்லாமலே ..
விழிகள் ரசிக்கின்றது
வெளிச்சம் இல்லாமலே ..
இதழ்கள் துடிக்கின்றது
மொழிகள் இல்லாமலே ..
மௌனம் தொடர்கின்றது
காதல் சொல்லாமலே ...!!!!


பீலிங் சும்மா சும்மா .

மேலும்

நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:21 am
நன்றி நன்றிகள் . 31-Oct-2015 5:19 am
சீக்கிரமா சொல்லுமா...ஹி ஹி 01-Apr-2015 4:21 pm
வாழ்த்துக்கள் தோழி 01-Apr-2015 2:02 pm
யாழ்மொழி - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2015 10:09 am

அந்த
வரவேற்பாளினி
அவ்வளவு பாந்தமாக
இருக்கிறாள் !

அவ்வளவு
உற்சாகம்
பரப்பிக் கொண்டிருக்கிறாள்
அந்தச் சூழலுக்கு !

அவ்வளவு
புன்னகை
வழிந்து கொண்டிருக்கிறது
அவளிடம் !

அவ்வளவு
உறுத்தாமல்
இருக்கிறது
அவளது மேக்கப் !

அவ்வளவு
இயல்பு வெளிப்படுகிறது
அவளது
நுனிநாக்கு ஆங்கிலத்தில் !

அவ்வளவு
நேர்த்தியாயிருக்கிறது
அவ்வப்போதான
அவளது தலைகோதல் !

ஆயினும்
அவளது
அந்தக் கண்களில்
கண்டுபிடித்து விடமுடிகிறது
அவள் இன்னும்
சாப்பிட்டிருக்கவில்லை
என்பதை !

மேலும்

உணவை மட்டுமா அவள் மறந்துவிட்டாள்?வரிகள் சிறப்பு தேவ்............. 11-Apr-2015 5:30 pm
அண்ணா உங்களால மட்டுமே எப்படி இப்படி யோசிக்க முடிகிறது .. அருமை அருமை .. 11-Apr-2015 5:17 pm
பணிக்கு செல்லும் பல பெண்களின் அவலங்களில் இதும் ஒன்று .. அருமை ... 11-Apr-2015 5:16 pm
ஆயினும் அவளது அந்தக் கண்களில் கண்டுபிடித்து விடமுடிகிறது அவள் இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை என்பதை ! கவியின் கரு இதுவே ....மிக சிறப்பு நட்பே... என்ன சொல்ல.... மிக அருமை PADAIPPU ... 11-Apr-2015 5:12 pm
யாழ்மொழி - கோபி சேகுவேரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2015 7:50 pm

அடுக்கி வைத்த
வார்த்தைகளெல்லாம்
அடுக்கடுக்காக
விழுந்து நொறுங்குகிறது
கவிதையெனும்
பிம்பம் உடைத்து..

நீ உதாசினப் படுத்திய
என் கிறுக்கல் ஒன்று..

மேலும்

நன்றி... தோழி 31-Mar-2015 11:24 pm
கவிதை...கவிதை 31-Mar-2015 9:11 pm
நன்றி... தோழி 31-Mar-2015 8:23 pm
நன்றி... தோழி 31-Mar-2015 8:23 pm
யாழ்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 1:58 pm

கவிதை
கண்களில் தொடங்கி
காதலில் என்பாய்..

உலகம்
என்னில் தொடங்கி
உன்னில் என்பாய் ...

பரிசு
தலைமயிர் முதல்
தரிசான தாழ்வரை
வர்ணித்துக் கவி கொடுப்பாய்...

காற்புள்ளி அரைப்புள்ளிகளும்
வாசித்துப் பூரித்தாலும்
மேற்குறித் தவறியதாய்
பொய்யாக பிழை சுட்டுவேன்...

நீயோ
மேற்கொண்டு இருவரியேனும்
வர்ணித்திட வேண்டுமென
வார்த்தைகளோடு வம்பிழுப்பாய் ...

நீ என்னை
எழுதிட வேண்டும் எனக்கு
நான் உன்னை
வாசித்திட வேண்டும் உனக்கு..

மேலும்

"நீ என்னை எழுதிட வேண்டும் எனக்கு நான் உன்னை வாசித்திட வேண்டும் உனக்கு.." இப்படி எழுதுனா எப்படி வாசிக்காம இருக்க முடியும்? கலக்கிடிங்க போங்க! 08-Jul-2015 10:50 pm
அழகிய படைப்பு தோழி.. 04-Jul-2015 8:30 am
மிகவும் அழகான வரிகள்.. அருமையா கவிதை ..வாழ்த்துக்கள் இப்படி ஒருவர் கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் ..... எதை என்று சொன்னால் நானும் முயல்வேன். 25-Jun-2015 10:28 am
அழகான வரிகள் அருமை யாழ்... 06-Apr-2015 11:48 am
யாழ்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2015 1:48 pm

மூர்க்கத்தன ஆண்மையால்
முடக்கப்பட்ட பெண் சுதந்தரம் ..
ஆடை அலங்காரப் பேச்சால்
அலங்கரிகப்படுவது ஏனோ ?

துகிலுரியப்பட்ட பாஞ்சாலிகள்
சேலை கட்டியச் செய்திகளை
திரைக்குப் பின்னே மறைத்து
வைத்தது ஏனோ ?

கைம்மையான கன்ணகிகளின்
சேலையை விலக்கத் துடிக்கும்
செஞ்சாந்தின் பின்னணி விமர்சிக்கப்
படுவதில்லை ஏனோ ?

மழலையையும் மாய்த்துவிட்டு
மன்னன் வேடம் போடுகின்ற
கயவர்களின் மத்தியில் -நவீன
ஆடையில் மட்டும் கலாச்சாரத்தை
தேடுவது ஏனோ ?

மேலும்

பழி ஓரிடம், பாவம் வேறிடம்! இச்சை ஓரிடம், இம்சை வேறிடம்! தூண்டல் ஓரிடம், தெறிப்பு வேறிடம்! பற்றல் ஓரிடம், வெடிப்பு வேறிடம்! இதுதான் இன்றைய நிலை!.. இது சரிசெஇயப்படவெண்டுமானால், எல்லாமும் சரிசெய்யப்படவேண்டும். உண்பது, உடுத்துவது எல்லாம் இரசாயனக்கலவை! வீதியில், வீட்டில் பார்பதிலெல்லாம் பெண்ணே போகப்பொருள்! விரலசைவில் வந்துவிட்டது காம்த்தூண்டல்.. போதாததற்கு, அரசே விற்கும் மதுக்கடைகள்! போதை, பித்து, வெறி பிடிக்கத்தான் செய்யும்! இதில், ஆணாகிலும், பெண்ணாகிலும் மிருகம் வெளிப்படும்! மாறுவோம், மாற்றுவோம், நல்வழியில் பயணித்து, நல்வழிக்கு கொண்டுசெல்வோம்.. 08-Jul-2015 10:46 pm
கவிதை ரொம்ம நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் 01-Apr-2015 12:52 am
"உடை உடையென எவரும் கொக்கரித்தால் இனி உடை உடையென உடைத்தெரிவோம் கொக்கரிப்பவர்களின் கொம்புகளை. ." ------ உங்கள் கவிதைகள் போலவே அருமையான் கருத்து அமுதினி.. வாழ்த்துகள்.. 27-Mar-2015 11:18 am
கவிதை மிக அருமை. வல்லுறவின்போது,அவள் ஒத்துழைக்க மறுத்தாள்.அதனால் கொல்லவேண்டியதாய்ப் போயிற்று..என்று கூசாமல் சொல்லப் பழகியிருக்கும் இந்தியாவின் மகன்கள் நிறைந்த தேசமிது..., இந்த லட்சணத்தில் பெண்ணின் உடைகள்தான் என்னைத் தூண்டியது என்று சொல்லும் மிருகங்கள், போர்த்திக் கொண்டு போவதுதான் கலாசாரம் என்று சொல்கின்றன..! சரி.போர்த்திக் கொண்டு போனவரகளையாவது விட்டுவைத்தார்களா எனில், குமரிகள் முதல் கிழவிகள் வரையும் சீரழித்தார்கள்..! சரி,வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்ட பெண்,அல்லது சிறுமி,,உங்கள் சொந்த சகோதரியாகவோ,மகளாகவோ இருந்தால் இப்படி சீரழிப்பீர்களா..என்று கேட்டால்,மகளைக் கெடுத்த தந்தை,சகோதரியைக் கெடுத்த சகோதரன் ..என்றுகூட செய்திகள் வருகின்றன..! இங்கு மாற வேண்டியது உடைகள் அல்ல..கயவர்களின் மனப் பான்மையே.. ! அதுவரை கலாச்சாரம்,பண்பாடு என்று சொல்லி பெண்களுக்கு வெளி போடுவது எல்லாமே வெற்றுப் பம்மாத்துதான் தோழி..! பெண்களுக்காகப் பெண்களே..நமக்காக நாமே போராடி ஒரு நிலையை எட்டினால்தான் அது நிரந்தரம்..! இன்னும் நிறைய தொடர்ந்து எழுதுங்கள் யாழ்மொழி ..வாழ்த்துக்கள்..! 27-Mar-2015 11:16 am
யாழ்மொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 4:22 pm

தேவதை ராட்சசி
=================
காய்ந்தப் புல்லைக்கூட
கண்டு இரசிக்கும் நானொரு
இயற்கை பிரியை ,இதத்தை
விரும்பிடும் இனிய தேவதை ..

அன்றுகொல் இன்றுகொல் என்றுகொல்
எண்ணாது இன்றேகொல் என்று முழங்கும்
நானொரு தேவதை ராட்சசி ...

அந்தப் பெண்ணின் நெஞ்சை சித்தரிக்கும்
எந்த கயவனானாலும் தயங்காமல் -தீ
பந்தமேந்தி கொளுத்தும் கொற்றவை
நானொரு தேவதை ராட்சசி ..

என்னினத்தை இழிவுபடுத்தும் ஏழரை
சனியன்களின் ஜென்மச்சனி நானே
கணிப்பேன் அவர்களின் ஆயுளை

அசுரன், தாருகனின் மார்பை பிளந்த
துர்காதேவிப்போல் கோரை பற்களைக்
கொண்டு கோர தாண்டவமிட்டு
காம கொடூரன்களின் குருதியை உறுஞ்சும்
நானொரு தேவத

மேலும்

என்னப்பா நீ இப்படி ஆயிட! நீ எப்பவுமே இப்படியா? இல்ல, எப்பவாச்சுதானா... 08-Jul-2015 10:33 pm
அருமை அருமை அருமை 01-Apr-2015 4:18 pm
நேரமிருப்பின் எனது ''உயிர்வேசி ''கவிதையைப் படித்துப் பாருங்கள் ! 27-Mar-2015 2:02 pm
நேரமிருப்பின் எனது ''உயிர்வேசி ''கவிதையைப் படித்துப் பாருங்கள் ! 27-Mar-2015 2:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (130)

user photo

விஜயலாய சோழன்

ஜெயங்கொண்ட சோழபுரம்
user photo

வைரமுத்து

மும்பை
user photo

ஜெயராமன்

நாகப்பட்டினம்

இவர் பின்தொடர்பவர்கள் (130)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
க உதய்

க உதய்

Kadayanallur in NELLAI

இவரை பின்தொடர்பவர்கள் (131)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே