காதல் கவிதை

பூ முகம் உன்னை
நான் காணும் போது
பூலோகம் கண்ணில்
தானாய் அடங்கி போகுது !

பெண் சுகம் கண்டு
அலைபவன் நானல்ல
இருந்தும் உன்மீது இன்று
மயங்கினேன் நான்மெல்ல !

இதை காதல் என்றுதான்
இதயம் எனக்குள் ஒலித்தது
உனை காணாத நொடிதான்
இதயம் மெல்ல வலித்தது !

பாலாஜி

எழுதியவர் : பாலாஜி (2-Aug-13, 7:21 pm)
சேர்த்தது : பாலாஜி பிள்ளை
Tanglish : kaadhal kavithai
பார்வை : 123

மேலே