கண்காணிப்புக் கேமரா - குருடாய் போன கடவுள்

ட்ராபிக் சிக்னலில்
கண்காணிப்புக் கேமரா.....

பச்சை விளக்கை பார்த்த பிறகு

கண்காணித்து விட்டு மிக
கவனமாக கடந்தது ஆடு........

சிவப்பு விளக்கை பார்த்த பின்னும்
சீக்கிரமாய் செல்ல வேண்டும் என்பதற்காய்

ஆட்டை அடித்துச் சென்றான் மனிதன்......!!!

மே என்று கத்தக் கூட இயலாமல்
மவுனித்து இறந்தது ஆடு.......

அடுத்து வந்த கார்கள்........

ஐயோ.....

அந்தக் காட்சியை விவரிக்க வேண்டாம்.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (8-Aug-13, 4:04 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

மேலே