மாடர்ன் சிற்பங்கள்

தீயில் விழுந்த ஈசலாய்
கருகியது என் மனம்
நீரில் விழுந்த எறும்பாய்
தத்தளித்தது என் மனம்
காற்றில் விழுந்த சருகாய்
அலைந்தது என் மனம்
கூட்டத்தில் தொலைந்த குழந்தையாய்
பயந்தது என் மனம்
என் பாட்டன் பூட்டன்
அணிந்த கோமணத்தை
ஆடையாய் அணியும்
இக்கால மாடர்ன்
சிற்பங்களை காணும்பொழுது.......

எழுதியவர் : க .கவின் பிரியதர்ஷினி (11-Aug-13, 4:29 pm)
பார்வை : 83

மேலே