கவிதையென்பது...

உளம்சென்று உண்மை விதைப்பது கவிதை
ஒருமுறைக்கு இருமுறை படிப்பது கவிதை
களம்சென்று வெற்றி காண்பது கவிதை
காய்ந்த மனதுக்கு களிப்பூட்டுவ தேகவிதை

திருமறை போலதினம் படிப்பது கவிதை
தீயனவிலக் கிதீர்வழி காட்டுவது கவிதை
ஒருவாசகம் ஆயினும் திருவாசக மாம்கவிதை
இருள்நீக்கி வெளிச்சம் கூட்டுவதே கவிதை

படித்துவிட்டு மறந்து செல்வதல்ல கவிதை
படித்தபின்பும் நெஞ்சை வருடுவதே கவிதை
கடித்து துப்பும்கனித் தோலோ கவிதை
கடினதோல் உள்ளிருக்கும் சுளையே கவிதை

எழுதியவர் : சுசீந்திரன் (16-Aug-13, 8:21 pm)
பார்வை : 48

மேலே