உன்னில் நான்
உன் புன்னகையில் என் கண்ணீர் ..
உன் இன்பத்தில் என் வலி...
உன் பார்வையில் என் ஆயுள்..
உன் கோபத்தில் என் காதல்..
உன் சுவாசத்தில் என் உயிர்..
இப்படி ஒவ்வொன்றும் எனக்கானது
உனக்காய் ஆனது..
இன்று என்னில் எதுவும் இல்லை...
உன் நினைவுகளையும் காதலையும்
தவிர.