வெளிநாட்டில் குடியுரிமை

கிடைக்கும்வரை
ஒற்றைக் காலில்
தவமிருந்து
நேர்த்தி வைப்பார்
இறைவனுக்கு ....!

கிடைத்த பின்னோ
எனக்கில்லை
இனி நிகரென்று
பறந்திடுவார்
கர்வத்தில்......!

கடன்பட்டு
வந்தவாழ்வை
மறந்திட்டு
சொகுசாய்
வாழ நினைப்பார்
அரச உதவியில்...!

ஊரிலிருக்கும்
அம்மாவுக்கும்
அன்பாக கூறிடுவார்
அழகான பெண்
பார்க்கும்படி.....!

சேர்ந்து திரிய
லட்சணமாய்
சிவப்பழகாய்
சினேகா போலிருந்தால்
இன்னும் நல்லதென்று..!

தேடிக் கண்டுபிடித்து
அம்மா கொண்டுவரமுன்
உச்சி முடியிழந்து
குட்டிச் சுவராயிடுவார்
கிடைக்கும் பணத்தில்...!

ஆனாலும்
மதிப்புண்டு
மாப்பிள்ளைக்கு
வெளிநாட்டுக் குடியுரிமை
கையிலிருப்பதால்.....!!
---------------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (27-Aug-13, 10:57 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 80

மேலே