கிருஷ்ணா .... கிருஷ்ணா ....!!
நாமம்கேட்டால் வருபவனே கிருஷ்ணாகிருஷ்ணா
கீதம்பாடினால் ஆடுபவனே கிருஷ்ணா கிருஷ்ணா அஷ்டமியில் உதித்தோனே கிருஷ்ணா கிருஷ்ணா
அகிலத்தை வாழ வைப்பாய் கிருஷ்ணா கிருஷ்ணா
பாதாரவிந்தம் பணிந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
பாவங்கள் போக்கிடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
பக்தருக்கிறங்கிடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
பதமலர் தந்திடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கோகுலம் வாழ்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கோபியர்கொஞ்சும் ரமணா கிருஷ்ணா கிருஷ்ணா
கோவர்த்தனகிரிதாரி கிருஷ்ணா கிருஷ்ணா
கோபங்கள் போக்கிடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
உடுப்பியில் உறைபவனே கிருஷ்ணா கிருஷ்ணா
உள்ளமதில்நிறைந்திடுவாய்கிருஷ்ணா கிருஷ்ணா
லீலாவிநோதனும் நீ கிருஷ்ணா கிருஷ்ணா
லீலைகள் புரிந்திடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
மாயங்கள் செய்திடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
மாயைகள் தீர்த்திடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
மண்ணைத் தின்றனையே கிருஷ்ணா கிருஷ்ணா
மண்ணுயிர் காத்திடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
விரும்பி அழைப்போர்க்கு கிருஷ்ணா கிருஷ்ணா
விரைவில்வந்திடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
விசுவாசமாய்இருப்போர்க்குகிருஷ்ணா கிருஷ்ணா
விஸ்வரூபம் காட்டிடுவாய் கிருஷ்ணா கிருஷ்ணா
கீதை உபதேசித்தவா கிருஷ்ணா கிருஷ்ணா
கீர்த்தனையில்உருகிடவா கிருஷ்ணா கிருஷ்ணா
தஞ்சம் அடைந்தோரை கிருஷ்ணா கிருஷ்ணா
தன்மையாய்அணைத்திடு நீ கிருஷ்ணாகிருஷ்ணா
பிரேமிக வரதனானாய் கிருஷ்ணா கிருஷ்ணா
பிறவிப்பிணி தீர்த்திடுவாய் கிருஷ்ணாகிருஷ்ணா
உன்புகழ் படிக்கையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
என் மனம் சிலிர்க்குதடா கிருஷ்ணா கிருஷ்ணா