தமிழா !

தமிழா !
யாதும் ஊரே யாவரும் கேளீர்
என்றவன் இன்று
சொந்தநாட்டில் அகதி !
சுதந்திரநாட்டில் அடிமை !

நீ
கொடிகளில் சிதறுண்டு
வலிகளை பிரசவிக்க
தலைவன்
கொடியை ஏற்றுகிறான் !!
நீ
விடியலை தேடும் விட்டில் - அவனோ
விளக்கை அணைத்துவிட்டு
ஒளி தருவேன் என்கிறான் !
உண்மையென நம்பி
ஊனமாகிறாய் !

ஈழத்து வேழமே நீ
எழுந்தாலும் வீழ்ந்தாலும்
சிட்டேறும்புகள்
செத்தேபோகும் !

நீ
முறைத்துபார்த்தால்
விறைத்துபோகும் கூட்டமா
உன்னை
வெற்றி கொள்வது ??
சதி சதி !

ஈழத்து உயிர்களை
வேரறுக்க ...
சமாதானம் காத்தவர்கள்
புதைத்தர்க்குபின்
புறப்பட்டு வருகிறார்கள்
புது கண்ணீரோடு !!

சதியில் சதுராடபட்டவனே !
மதிகொண்டு சதிவெல்ல
ஒன்றுபடு
உண்டு வாழ்வதற்கல்ல !
உயர்ந்து வாழ்வதற்கும் !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (28-Aug-13, 11:55 am)
பார்வை : 57

மேலே