அலைகள்

கனவுகள்
அலைகடலில்
மிதந்துவரும்...
வந்த வேகத்தில்
எல்லாம்
அழிந்து போகும்
ஆனாலும்.....
மீண்டும் மீண்டும்
மிதந்து வரும்
அந்த நம்பிக்கைகள்
என்றும் அழியாது
ஆழ்ந்து கவனித்தால்
அலைகடலும்
உனக்குப் போதிமரம்
காயங்கள் ஆறிவிடும்
கவலைகள் கரைந்துவிடும்
உணர்வுகள்
புதிதாய் பிறந்துவரும்
விழுந்து போவோம் என்றே
தெரிந்தப் பிறகும்
எழுந்து வரும் அலைகளே!
என் காலடிகளை
அழித்து விட்டு
எழுதிச் செல்வது என்ன?
கடந்த காலத்தை எண்ணி
கலங்காதே என்றா...?
.................பரிதி.முத்துராசன்