அவளுக்காக நான்

காதல்என்ற ஒருமொழி
கண்டு
வார்த்தைகளை கோர்த்து
நீவரும் பாதையில்
தூவிவைத்தேன்.


கண்கொண்டு உன்னைபார்த்த
நொடி
கண்கலங்கி நிற்கிறேன்.


ஏற்றுக்கொள்வாயா என்காதலை
என்று
ஏங்கி கொண்டுஇருக்கிறேன் .


புன்னகையாவது உதிர்வாயா
இல்லை
பார்வையாலே இதயத்தை
துண்டாக்கி செல்வாயா.


இதயத்தில் விதையாய்
விழுந்த
என்காதல் இன்று விருட்சமாய்
வளர்ந்து நிற்கிறது.


எப்போது வருவாய்பெண்ணே
அந்த
நிழலில் இளைப்பாற.

எழுதியவர் : messersuresh (30-Dec-10, 4:46 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 521

மேலே