தாமரை

ஆதவனைக் கண்டால்
முகம் மலரும்
பருவப் பெண்

நீருக்குள் வாழ்ந்த போதும்
சுதந்திரம் வேண்டி
நீருடன் ஒட்டாமல் அறப்போர் செய்யும்
சுதந்திரப் போராளி

அழகால் வசீகரம் செய்து
வண்டுக்கு தேனூட்டும் அன்னை

சலனம் இல்லாத நீருக்குள்
நின்று சாதகம் செய்யும்
சங்கீதப் பாவை

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (6-Sep-13, 8:01 am)
Tanglish : thamarai
பார்வை : 95

மேலே