?????

உண்டு உறங்கி உறைக்கும் போது
விலகிச் செல்கிறாய்
வேதனையால் எனை நனைத்து
வெறுக்க வைக்கிறாய்

உயிரை திருகி கையில் தந்து
உணர்வை கொல்கிறாய்
பொறுமை கொள்ள நினைக்கும் போது
பொங்கி எழுகிறாய்

துச்சமான இடத்தில் கூட
துணையை தேடுகிறாய்
மகிழ்வான உணர்வைகூட
மரணவலி என்கிறாய்

மரியாதை நிமித்தம் கூட
மறந்தும் போகிறாய்
மனித உணர்வை மண்ணாக்கி
மலைத்து போக வைக்கிறாய்

கூடி செய்த செய்த செயலைக் கூட
சகுனம் பார்த்து சந்தி சிரிக்க வைக்கிறாய்
வாடி போகும் நேரத்திலும்
வீர வசனம் பேசுகிறாய்

காரணமே தூசியாகும்
எதார்த்தமே ஆசியாகும்
பிரித்தறியும் முன்னே
பிணந்தின்னியாகிறாய்

கண்டு கேட்டு உணரும் போது
கலங்கி நிற்கிறாய்
காதிலே கேட்பதேல்லாம்
கடவுள் வரம் என்கிறாய்

நீ செய்யும் தவறுக்கு நான் கொள்ளும் உணர்வு
நீடூழி வாழ்வதற்க்கு வேண்டாம் இந்த உறவு

எழுதியவர் : bhanukl (6-Sep-13, 9:33 am)
பார்வை : 145

மேலே